சென்னை, நவ.21- பேருந்தை ஓட்டும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிரி ழந்தார். 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்ற நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டும் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் பூந்த மல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை செல்லக்கூடிய தடம் எண் 578 பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு திருபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி பேருந்தை இயக்கி கொண்டு இருந்தார். அப்போது ஓட்டுநர் ஸ்ரீதர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு பேருந்தை ஓரங்கட்டி நிறுத்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் உடனடியாக பயணிகள் உதவி யுடன் ஓட்டுநரை மீட்ட நடத்துநர், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.