திருவண்ணாமலை நகரத்தில் சேகரமாகும் குப்பைகளை புனல்காடு கிராமத்தில் பசுமையான இயற்கை சூழல் நிறைந்த மலையடிவாரத்தில் மாவட்ட நிர்வாகம் கொட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காஞ்சி சாலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், எஸ்.பலராமன், சாமிக்கண்ணு, புனல்காடு செல்வம், பழனி, அசோக், ராஜேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.