வழுதலம்பேடு கிராம வளர்ச்சி நிதிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.76 லட்சம் ஒதுக்கீடு
திருவள்ளூர், செப். 17- வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலில் திங்களன்று (செப் 16), பட்டியலின மக்க ளோடு வழிபாடு செய்த பின்னர் கிராம வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக ரூ.76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சி யர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள இந்த பெரிய வழுதலம்பேடு கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைப்பதற்கு ரூ.20 லட்சம், பெரிய வழுதலம்பேடு கிராமம் வெயிட்டிங் செட் அமைக்கும் பணிக்கு ரூ.5.9 லட்சம், பெரிய வழுதலம்பேடு எட்டியம்மன் கோவில் தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ.8.8 லட்சம், வழுதலம் கிராமத்தில் மயானத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்க ரூ.25 லட்சம், வழுதலபேடு காலனி முதல் மயானம் வரை கான்கிரீட் சாலை அமைக்க ரூ.16.6 லட்சம் என மொத்தம் சிறப்பு நிதியாக ரூ.76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து வழிபடுவ தற்கு முதல் படி எடுத்து வைத்து உள்ளோம். வழிபாடு என்பது அனைவருக்கும் சமம் என்ற கோட்பாடு நிலை நிறுத்தப்பட்டுள்ளது இது மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாகும். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைத் துறை துணை ஆணையர் கே. சித்ராதேவி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவண குமாரி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
சென்னை,செப்.17- தாம்பரம் மாநகராட்சி யில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், 2வது மண்டல அலுவல கத்தில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் திங்களன்று நடந்தது. இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில், 700 தூய்மை பணி யாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப் பட்டது. முகாமில் அனைத்து பணியாளருக்கும் 15 வகையான பரிசோதனை களும், மொத்தம் 30 மருத்துவ ஆய்வக பரிசோ தனைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி மேற் கொள்ளப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் தங்கும் விடுதி !
சென்னை,செப்.17- சென்னை மாநில கல்லூரியில் லிப்ட் வசதியுடன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் இளநிலை படிப்பு களில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வெறும் 1140 மட்டுமே. குறைந்த கட்டணத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வியை பெறுவதற்கு ஏற்ற இடம் என்பதால் இந்த கல்லூரிக்கு எப்போ துமே மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு துறை கள் இருந்தாலும், காது கேளாதோர் மற்றும் பார்வையற்ற மாணவர் களுக்கான பட்ட படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இளங்கலை பட்ட படிப்பு களில் பி.காம்., பி.சி.ஏ.வில் இவர் களுக்கு என்று தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இளங்கலை படிப்புகளை முடித்து, முதுகலை படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக எம்.காம். படிப்பும் 2022-23ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அரசு உதவி யுடன் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த படிப்புகளை பயில்வது இங்கு மட்டும் தான். அதன்படி இங்கு 350 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பலரும் வெளியூர்களில் இருந்து இங்கு உள்ள கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கின்றனர். பொதுவான விடுதியாக இல்லா மல் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கென பிரத்தியேக தங்கும் விடுதி கட்டிதரப்படும் என கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கல்லூரி யின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித் திருந்தார். அந்த அறிவிப்பின்படி, ரூ.21 கோடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தங்கும் விடுதி தயாராகி உள்ளது. 210 பேர் தங்கும் வசதியுடன் மாணவ, மாணவி களுக்கென தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கென பிரத்தியேக அறைகள், எளிதாக கையாளக்கூடிய கழிவறைகள், லிப்ட் வசதி மற்றும் சிறப்பு நடைமேடை யுடன் இந்த விடுதி வடிவமைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில், ‘‘மாநில கல்லூரி என்றாலே மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். காரணம் இங்கு கிடைக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி, மற்றும் சிறந்த வளாகம், அடிப்படை வசதிகள் என அனைத்தும் மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களை இந்த வளாகத்தில் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த தங்கும் விடுதியும் ஒன்று. மேலும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இந்த விடுதி அமைந்திருப்பதால் மாண வர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. தற்போது விடுதியின் மொத்தப்பணி களும் நிறைவடைந்து விட்டது. விரை வில் முதலமைச்சர் தலைமையில் இதன் திறப்பு விழா நடைபெறும். அன்று நமது கல்லூரிக்கு மேலும் ஒரு சிறப்பு சேரும்,’’ என்றார்.
மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி
சென்னை,செப்.17- சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி வழங்க பேரிடர் மேலாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழைக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், தற்போது சென்னை மாநகராட்சியானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது உள்ளிட்டவை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
வீடுகளுக்கான லிஃப்ட்டுகள் அறிமுகம்
கோயம்புத்தூர், செப்.17- வீடுகளுக்கு பயன்படக்கூடிய லிஃப்ட்டுகளை இந்தியா வின் மிகப்பெரிய ஹோம் எலிவேட்டர் பிராண்டான நிபவ் லிஃப்ட்ஸ் அறிமுகம் செய்துள்ளது. நகர்வுத்திறனுக்கு தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குவதில் உறுதியுடன் இயங்கிவரும் நிபவ் நேர்த்தி யான வடிவமைப்புடன், நவீன தொழில்நுட்பத்தை சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கேபின் டிஸ்பிளே, நுண்ணுணர்வுமிக்க எல்ஓபி டிஸ்பிளே மற்றும் துல்லியமான பயணம் மற்றும் மிருது வான தரை இறக்கத்திற்காக LIDAR 2.0 தொழில்நுட்பம் ஆகிய சிறப்பம்சங்களைக் இந்த லிஃப்ட்டுகள் கொண் டுள்ளன என்று நிபவ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விமல் பாபு தெரிவித்துள்ளார்.
மூதாட்டி கழுத்தை அறுத்துக்கொலை
மாமல்லபுரம்,செப்,17- கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத் தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது70). தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வந்தார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடைநிலை ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் இறந்து விட்டார். இவர்களது 3 மகன்களும், 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். கன்னியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இட்லி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு நீண்டநேரம் வரை கன்னியம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் கதவும் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள சமையல் அறையில் கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கன்னியம்மாள் உடல் கிடந்த இடம் அருகே சிறிய கத்தி, உடைந்த வலையல்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப் பற்றினர். மோப்பநாய் டைகர், கொலை நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று சுடுகாடு அருகே நின்று விட்டது.
தங்கத்தின் விலை குறைவு
சென்னை, செப். 17- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வா யன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,920 க்கு விற்பனை செய்யப்படு கிறது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,865க்கும், ஒரு சவரன் 54,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.98 க்கு விற்பனையான நிலையில், செவ்வாயன்று ஒரு ரூபாய் குறைந்து ரூ.97 க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.97,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பார்கிங் வசதியின்மையால் தொடரும் பைக் திருட்டு
சென்னை,செப்.17- வியாசர்பாடி ரயில் நிலை யத்தில் பார்க்கிங் பகுதியை டெண்டர் விடாமல் உள்ள தால் அடிக்கடி பைக்குகள் திருட்டு நடக்கிறது. இத னால், பயணிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், முல்லை நகர், சர்மா நகர், புளியந்தோப்பு, கணேசபுரம் உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர் கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் தினமும் புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில் மூலம் சென்று வருகின்றனர். இதற்காக ஜீவா ரயில் நிலையம் சென்று அங்கிருந்து சென்னை கடற்கரை சந்திப்பு மார்க்கமாக கிண்டி, தாம்ப ரம், மறைமலைநகர், செங் கல்பட்டு மற்றும் ஆவடி, செவ்வாய்பேட்டை, திரு வள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள், தொழிற்சாலை களுக்கு சென்று வருகின்ற னர். இவர்கள், காலையில் தங்களது பைக்கில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வந்து, அங்குள்ள பார்க்கிங் பகுதி யில் நிறுத்திவிட்டு செல்வார் கள். மாலையில் திரும்பும் போது, தங்களது வாகனங் களை எடுத்து செல்வது வழக்கம். ஆனால், இந்த பார்க்கிங் பகுதி டெண்டர் விடாமல் உள்ளதாக கூறப் படுகிறது. இதனால், இங்கு பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்படும் பைக்குகள் அடிக்கடி திருடுபோகின்றன. குறிப்பாக, விலை உயர்ந்த பைக்குகளை மர்மநபர்கள் திருடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாசர் பாடி, 3வது பள்ளத்தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர், கடந்த 14ம் தேதி வழக்கம் போல் ஜீவா ரயில் நிலை யத்தில், தனது பைக்கை நிறுத்திவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். மாலை யில் திரும்பி வந்தபோது, அவரது பைக்கை காண வில்லை. இதுபோன்று தொடர்ந்து நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர். பைக் திருட்டு குறித்து ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரயில் நிலை யத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கறவை மாடுகளுக்கு கருச்சிதைவை தடுப்பதற்கான தடுப்பூசித் திட்டம்
ராணிப்பேட்டை,செப்.17- தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கறவை மாட்டுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தும் புரு செல்லோசிஸ் நோய்க்கான நான்காவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு விவசாயிகள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். புருசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புரூசெல்லா அபார்டஸ் என்ற பாக்டீ ரியாவால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சல், சினை ஈற்றும் தருவாயில் கருச்சிதைவு ஏற்படுகிறது. மேலும் இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல் மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது. இந்த நோய்வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தினை ஏற்படுத்தும் நோயாகும். மேலும், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் புருசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்று களுக்கு மட்டும் செலுத்தப்படும். தடுப்பூசி திட்டத்தில் 4வது தவணை செப்.18 முதல் அக்.15 வரை செலுத்தப்பட உள்ளது. ஒரு முறை செலுத்திக் கொண்டால் அந்த கிடேரி கன்று களுக்கு ஆயுள் முழுவதற்கு மான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப் பெறும். 4 மாதங்களுக்கு ஒரு முறை 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடாரி கன்று களுக்கு செலுத்தப்பட உள்ளது. காளை கன்றுகளுக்கு, சினை மாடுகளுக்கு எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.2.17லட்சம் பறிமுதல்
கடலூர், செப்.17- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திர பதிவுக்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்து வந்தது. மேலும் தரகர்கள் சிலர் தாங்களே பதிவாளர்கள் போன்று லஞ்சம் பெறுகிறார்கள். இதனால் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் செல்வதை தடுத்து நிறுத்தி விடுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்குள்ள அனைத்து அறைகள் மற்றும் மேஜைகளில் இரவு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.17 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் லஞ்சமாக பெறப்பட்டது என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.