கள்ளக்குறிச்சி, அக்.28 – கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பூ.மாம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பட்டியலின மக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த கரும காரிய குளக்கரைக்கு சென்று வந்த பாதையில் தனிநபர் கொட்டகை அமைத்து வழியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரியம் முயற்சித்த போது சில நபர்கள் தடுத்து நிறுத்திய தால் ஆறு மாதமாக பணியை கிடைப்பில் போட்டதை கண்டித்தும் கிராம மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் காத்தி ருக்கும் போராட்டம் நடத்த திட்ட மிடப்பட்டது. இந்த நிலையில், உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, ஒரு வார காலத்திற் கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று சிபிஎம் தலை வர்களிடம் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உதவி மின் பொறியாளர் அருண்குமார், உளுந்தூர்பேட்டை உதவி செயற்பொறியாளர் சிவராம கிருஷ்ணன், கம்பியர் ஆர்.சந்தி ராயர்,மற்றும் கிராம நிர்வாக அலு வலர் வருவாய் அலுவலர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார், மாணவர் சங்கத் தலைவர் ஜெ.டார்வின், கிளைச் செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.