திருவள்ளூர்,ஜூலை 7- திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தில்லியில் உள்ள தேசிய சேர்மனை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடனை தள்ளுபடி செய்து ஆலையை நவீனப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புது தில்லியில் தேசிய சர்க்கரை ஆலைகளின் தலைவரை சந்தித்து விவசாயிகள் சங்கம் சார்பில் வலி யுறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட திருத்தணி கூட்டு றவு ஆலையில், திரு வாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, சாலை, அரக் கோணம், ஊத்துகோட்டை ஆகிய 7 கரும்பு கோட்டங்க ளிலிருந்து விவசாயிகள் ஆலைக்கு அரவைக்கு கரும்பு அனுப்பி வரு கின்றனர். கடந்த 1994 ல் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த ரூ.5.02 கோடி கடன்பெறப்பட்டுள்ளது. இதுவரை கடனுடன், வட்டி, அபராத வட்டி சேர்த்து ரூ.26.50 கோடியாக அதி கரித்து விட்டது. இந்நிலை யில், தமிழ்நாடு அரசு ரூ.9.50 கோடி கடனை கட்டி உள்ளது. இந்நிலை யில், தில்லியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சேர்மன் ஹர்ஷ் வர்தன் பாட்டீலை அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் விஜி கிருஷ்ணன், இணைச் செய லாளர் தியாகி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் மாநில பொதுச் செயலாளர் த.ரவீந்திரன், மாநில பொரு ளாளர் சி.பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், ஸ்ரீநாத் கொண்ட குழுவினர் சந்தித்து சர்க்கரை ஆலை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். தேசிய சேர்மன், உயர் அதிகாரி களை அழைத்து பேசி னார். கூட்டுறவு ஆலை களை பாதுகாக்க விவ சாயிகள் சங்கம் முயற்சியை பாராட்டிய தோடு முடிந்த உதவிகளைச் செய்வோம் என்றும் இந்த கோரிக்கையை ஒன்றிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் உறுதி அளித்ததாக விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.