districts

img

சிபிஎம் விழுப்புரம் மாவட்ட மாநாடு செஞ்சியில் எழுச்சியுடன் துவங்கியது

செஞ்சி,அக்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  விழுப்புரம் மாவட்ட 24- வது மாநாடு  செஞ்சியில் தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, என்.சங்கரய்யா அரங்கத்தில் (வள்ளி அண்ணாமலைதிருமண மண்டபம்) வியாழனன்று (அக்.24)எழுச்சியுடன் துவங்கியது.  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் செங்கொடியை மூத்த உறுப்பினர் கே.எம்.ஜெயராமன் ஏற்றி வைத்தார். எஸ்.வேல்மாறன், ஆர்.கண்ணப்பன், எஸ்.இலக்கிய லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கி னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ்.முத்துக்குமரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் கே.மாதன் அனைவரை யும் வரவேற்றார். முதல் நாளில் வேலை அறிக் கையை மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் சமர்ப்பித்தார், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன் சமர்ப்பித்தார். செயலா ளர் அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.இராத கிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன்,எஸ். கீதா, ஆர்.மூர்த்தி,ஏ. சங்கரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.அறிவழகன், எஸ்.வேல்மாறன், ஆர்.டி. முருகன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாநாட்டை  யெட்டி செஞ்சி மாநகரம் செங்கொடி களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெள்ளியன்று (அக்,25)  மாநாட்டை  முடித்து வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்தரன் பேசுகிறார். வரவேற்பு குழு செயலாளர் ஆல்பர்ட்  வேளாங்கண்ணி நன்றி கூறுகிறார். மாவட்ட மாநாட்டில் விழுப்புரம் மாவட்ட  நலன் சார்ந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.