districts

img

நீர்வளத்துறைக்கு 41 புதிய வாகனங்கள் முதலமைச்சர் வழங்கினார்

சென்னை,அக்.25- நீர்வளத்துறை பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக 41 வாகனங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் மேம்படுத்தி விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு துறைகளின் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு புதிய கட்டமைப்புகளை உருவாக்கு தல், ஏற்கெனவே உள்ள நீர்நிலை கள் மற்றும் அதன் உட்கட்டமைப்பு களை நல்ல முறையில் பராமரித்தல், பாசன கட்டமைப்புகளான அணை கள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்பு சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்ற வற்றை உருவாக்குதல், புனரமைத் தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.

நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து உப கோட்டங்களில் பணி புரியும் அனைத்து உதவி செயற் பொறியாளர்களுக்கும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதியதாக வாகனங்களை வழங் கிடும் விதமாக, 3 கோடியே 70  லட்சம் ரூபாய் மதிப்பில் 41 வாகனங் கள் கொள்முதல் செய்யப்பட்டன. நீர்வளத்துறையின் திட்ட உரு வாக்கப் பிரிவின் உதவி செயற் பொறியாளர்களின் பயன்பாட்டிற் காக வழங்கிடும் வகையில் அவ்வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை  செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக் கான சாவிகளை உதவி செயற்பொறி யாளர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலா ளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை முதன்மைத் தலைமைச் செயலா ளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறி யாளர் கு. அசோகன், நீர்வளத்துறை  திட்ட உருவாக்கப் பிரிவின் தலை மைப் பொறியாளர் க.பொன்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.