புதுச்சேரி, டிச.7 - புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி துவக்க விழா இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கல்வித் துறை அமைச்சர் நமச்சி வாயம் தலைமை தாங்கி னார். விழாவில் முதல்வர் ரங்க சாமி கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்ட மன்ற உறுப்பினர் ஆறுமு கம் (எ) ஏகேடி மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்கு நர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி, துணை முதல்வரும் ஒருங்கிணைப் பாளருமான சந்திரன், ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடை பெறும் கண்காட்சியில் தொடக்கப் பள்ளி, நடு நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஆசிரியர்கள் பிரிவு ஆகிய பிரிவுகளில் 400 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப் புகள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள் ளது.