districts

img

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி சென்னை அணிக்கு கோப்பை வழங்கினார் முதல்வர்

சென்னை, அக்.25- தமிழ்நாட்டின் உள்ளூர் வீரர்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி உள்ளிட்ட 25 வகையான விளையாட்டு போட்டிகள் 20 நாட்களாக சென்னை,திருச்சி,மதுரை, செங்கல்பட்டு நகரில் களைகட்டியது. இதற்கான  நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடை பெற்றது. வண்ணமயமான இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை அசத்தல் ஒட்டுமொத்தமாக 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்களை அள்ளிய சென்னை மாவட்டம் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்து கோப்பையைக் தக்க வைத்துக் கொண்டது. 31 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலம் உட்பட 93 பதக்கம் வென்ற செங்கல்பட்டு 2வது இடமும், 23 தங்கம், 40 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்கள் வென்ற கோவை 3 வது  இடத்தையும் பிடித்தது. 21 தங்கத்துடன் சேலம் 4 வது இடமும் பிடித்தது. 2023 ஆம் ஆண்டு நடந்த போட்டி யில் 61 தங்கம், 33 வெள்ளி, 19 வெண்க லம் உள்ளிட்ட 113 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்த சென்னை இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்து அசத்தியது.

 பரிசளிப்பு

போட்டிகளில் வெற்றி பெற்ற வீர்ர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நாங்களும்  ‘இந்தியா’ அணிதான்

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘டீம் ஸ்பிரிட்’ என்று விளையாட்டுக் களத்தில் சொல்வார்கள். விளையாட்டுப் போட்டி களை நடத்தும்போதும் பல்வேறு துறை யினருடன் இணைந்து செயல்படக் கூடிய இத்தகைய ’டீம் ஸ்பிரிட்’ தேவை. சாதாரண வீடுகளில் இருந்து வந்து, உலக அரங்கில் பதக்கங்களையும் பாராட்டுகளையும் குவிக்கப்பார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களான உங்கள் திறமைமேல் நம்பிக்கை வைத்து சொல்கிறேன். விளையாட்டு என்பது வெறும் போட்டியில்லை. அது உடல் வலிமையையும், மன வலிமையையும் தரக்கூடியது. எனவே, பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு விளை யாட்டில் ஆர்வம் இருந்தால் அதை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் ஆதரவு கிடைத்தால்போதும் அதுவே பாதி வெற்றியைக் கொடுத்து விடும். விளையாட்டு துறை பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்கப் படுத்த ஏராளமான உதவிகள் வழங்கப் படுகிறது என்றும் தெரிவித்தார். துணை முதல்வர் இந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் கோப்பை உயர்ந்துள்ளது. அந்த அளவிற்கு போட்டிகளை பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளோம் என்றார். இந்தியாவிலேயே ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் அதிக வீரர்கள் கலந்து கொள்வதிலும், அதிக பரிசுத் தொகை வழங்கப்படுவதிலும் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது என்றும் கூறினார்.