districts

img

வாரிய வீட்டின் காரை பெயர்ந்து விழுந்து விபத்து

சென்னை, செப். 20 - வாரிய வீட்டின் மேற்கூறையின் காரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக 3 மாத குழந்தை பாதிப்பின்றி தப்பியது. 170வது வார்டு, கோட்டூர்புரம் சித்ரா நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. 3 மாடிகள் கொண்ட 23 அடுக்குமாடி குடியிருப்புகளில் 460 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் 1998ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் யு பிளாக், 2வது மாடியில் (எண் 408) செல்வராணி என்ப வர் வசித்து வருகிறார். இவரது மகள் சரண்யா, அவரது 3 மாத குழந்தை ஆகியோருடன் புதனன்று (செப்.20) அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, தளத்தின் காரை பெயர்ந்து விழ தொடங்கியது. இந்த சத்தத்தை கேட்ட செல்வ ராணி உடனடியாக தாவி குழந்தை மீது படுத்துக் கொண்டார். இதனால் அவர் மீது காரைகள் இடிந்து விழுந்தன. அதில் காய மடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் வெங்க டேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப் பட்டு 24 வருடங்களாகிறது. இந்த அடுக்குமாடி வீடுகளில் வெளிப்புறத்தில் மட்டும் சிற்சில மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது போதுமானதல்ல. காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் குடியிருப்போரிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, முழுமை யாக மராமத்து பணிகளை செய்ய வேண்டும். கட்டி டங்களை வலுவிழுந்து இருப்பின், இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்ய வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது.  மேலும், “கோட்டூர் புரம் பகுதியில் மறு கட்டு மானம் செய்வதற்காக 1600 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ஓராண்டா கிறது. கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, கட்டு மானப் பணியை விரைந்து தொடங்கி, உரிய காலத்தில் பயனாளிகளுக்கு வீடுகளை அரசு தர வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர் பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியனை, கட்சியின் பகுதிச் செயலாளர் ஜி. வெங்கடேஷ், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜோசப், சுந்தர், கிளைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் சந்தித்து மனு அளித்து பேசினர்.