சென்னை, ஜூலை 29 - சட்டம் - ஒழுங்கு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக சென்னை தலை மைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியா ளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஒருவரை ஒருவர் பழி வாங்கும் முன் விரோதக் கொலைகள் தான் தமிழகத்தில் நடக்கின்றன. மற்ற படி வன்முறைச் சம்பவங்கள் நடக்க வில்லை. புதுச்சேரியில் நிகழ்ந்த படு கொலைகள் கூட தமிழகத்தில் நிகழ்ந்த தாக குற்றம் சாட்டுகிறார்கள்” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என்ற அளவுக்கு எந்த வன்முறைச் சம்பவங்களும் நடைபெற வில்லை. எனினும், யார் யாருக்கு முன்விரோதம் இருக்கிறது என்பதை அரசு கண்டறிந்து வருகிறது. ரவுடிகள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்க ளுக்குள் பகைமையை கண்டறிந்து தீர்த்து வைக்க முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
அச்சுறுத்தல் இருப்பதாக அரசியல் தலைவர்கள் சொன்னால் அரசு பாது காப்பு கொடுக்க தயாராக உள்ளது. ஆனால் யாரும் அச்சுறுத்தல் இருப்ப தாக தெரிவிக்கவில்லை” என்றும் அமைச்சர் கூறினார்.
தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாளுக்கு முன்பு ஆணவப் படுகொலை ஒன்று நடந்துள்ளது. இதுபோன்ற சம்ப வங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதுபோன்ற கொலைகளைத் தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறித்து கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், “ஆணவப் படுகொலைகளை திமுக என்றைக்கும் ஆதரிக்காது. அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவது யாராக இருந்தா லும் அவர்கள் மீது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “ஆண வப் படுகொலையில் ஈடுபடும் குற்றவாளி களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் ஆணவப் படுகொலை உள்ளிட்ட குற்றங்கள் குறை யும் என்று மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,“ எந்த கொலை யாக இருந்தாலும் இந்த குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படு கிறது” என்றார்.