districts

முதல்வரின் அறிவிப்புக்கு தடை போடும் வாரியம்!

சென்னை,நவ.14- முதலமைச்சரின் அறிவிப்புக்கு முட்டுக்கட்டையாக அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். வீடு வழங்காமல் அலைக்கழிக்கப்படு வதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றது. அப்போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தின் பெயரை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றினார். வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அறி வித்தார். இதனையொட்டி சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வீடற்ற மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் வீடு கேட்டு விண்ணப்பித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்த ஆட்சியர், 108 பேருக்கு வீடு வழங்க, வாரியத்தின் காஞ்சிபுரம் கோட்ட செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, முருகமங்கலம் திட்ட பகுதியில் வீடுகள் ஒதுக்கிய வாரிய அதிகாரி கள், ரூ3.56 லட்சம்  பங்களிப்பு தொகையை செலுத்த அறிவுறுத்தி னர். இதையடுத்து மாற்றுத்திறனாளி கள் ஒரு பகுதியினர் ரூ.3 லட்சம்   கடன் கேட்டு காஞ்சிபுரம் மத்திய  கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்த னர். கடன் வாங்க தேவையான ஆவணங்களை வங்கி அதிகாரிகள் வாரியத்திடம் கோரியுள்ளனர். அவற்றை வாரிய அதிகாரிகள் வழங்கி ஒத்துழைக்காததால் வங்கி நிர்வாகம் கடன் வழங்க மறுத்து விட்டதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோன்று வீடு கேட்டு சென்னை மாவட்ட ஆட்சியரிடமும் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத் தனர். இதன் தொடர்ச்சியாக கே.கே.நகர் கோட்ட செயற்பொறி யாளர் தென்சென்னை பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னைக்குள் வீடு ஒதுக்க இயலாது. 25 கி.மீ.தொலைவில் புறநகர்ப் பகுதிகளில் தான் வீடு ஒதுக்க முடியும் என தெரி வித்துள்ளார்.  வடசென்னை, மத்திய சென்னை பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு, மணலி பகுதியில் வீடு ஒதுக்கி பங்களிப்பு தொகையை ரூ. 10 லட்சம் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அதிருப்தியும், விரக்தியும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார், “தமிழ்நாட்டில் எந்த  ஒரு மாற்றுதிறனாளியும் பாதுகாப் பற்ற முறையில் வீடற்று இருக்க கூடாது. விளிம்பு நிலையில் உள்ள  மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை யும், மாண்பையும் பாதுகாக்கும் வகையில் வீடு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதை சீர்குலைக்கும் வகையில், முதலமைச்சரின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் அதிகாரி களின் செயல்பாடுகள் அமைந் துள்ளன. இதனை முதலமைச்சர் தலையிட்டு சரி செய்ய வேண்டும்” என்றார். “முருகமங்கலம் திட்ட பகுதி யில் வீடு பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வீடு பெறும் வகையில் காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி மூலம் ரூ3 லட்சம்   கடன் வழங்க வேண்டும்.செங்கல் பட்டு, காஞ்சிபுரத்தில் வீடு கேட்டு  மனு கொடுத்து காத்திருக்கும்  அனைத்து மாற்றுத்திறனாளிகளுக் கும் வீடு கொடுப்பதை உறுதிபடுத்த வேண்டும். சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் குடிசை மாற்று வாரிய விதியின் படி 5 கி.மீ. சுற்றள வுக்குள் வீடு கொடுக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் பலன் பெறும் வகையில் ஏற்கெனவே நடை முறையில் இருந்த சுலப தவணை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தினார்.