districts

img

புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

புதுச்சேரி, பிப்.12- புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடர் புதன்கிழமை (பிப்.12) காலை 9.30 மணிக்கு கூடிய தும், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், கர்நாடாக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, ரத்தன் டாடா,  இதய சிகிச்சை நிபுணர் செரியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்கள் நில.கங்காதரன், காத்த வராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலை வர் செல்வம் கொண்டு வந்தார். அனைத் தொடர்ந்து, உறுப்பி னர்கள் அனைவரும்  ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். பிறகு, சரக்கு சேவை வரி திருத்தம் குறித்து திருத்தங்கள் மற்றும் இந்திய தணிக்கை தலை வரின் புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கைகளை முதல மைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 2024,2025 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொகையான ரூ.700.35கோடிக்கான தொகைக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு, பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. வெளிநடப்பு முன்னதாக, என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு நான்கு வரு டங்களில் அறிவித்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை. செயல்பாட்டுக்கு கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்  பட்டுள்ளது.  ஒன்றிய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை  தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்  சிவா தலைமையில் திமுக மற்றும்  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தனர்.  எம்எல்ஏ இடைநீக்கம் பேரவைத் தலைவர் மீது கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் படி பேரவை கூட்டத்தை பேரவைத் தலைவர் செல்வம் நடத்தக் கூடாது என வலியுறுத்தி சுயேச்சை உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி பேரவை தலை வர் இருக்கை முன்பு தர்ணா வில் ஈடுபட்டார். அவரை கூட்டத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து பேரவை தலை வர் உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து சபைக் காவலர்களால் அவர் வெளியேற்றப்பட்டார். மொத்தத்தில் ஒன்றரை மணி நேரத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.

மீண்டும் தலைதூக்கிய பாஜக கோஷ்டி பூசல்

மீண்டும் தலைதூக்கிய பாஜக கோஷ்டி பூசல் புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிதாக 8 மதுபான ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக எம்.எல்.ஏ-க்களும் போராட்டம் நடத்தினர்.   புதுவை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வந்த பாஜக எம்.எல்.ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக், ஆகியோர் சட்டப்பேரவைக்குள் செல்லாமல், நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, புதுவைக்கு மதுபான தொழிற்சாலைகள் வேண்டாம் என்று கூறினர். மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆளுநர், முதல்வர், அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். பாஜகவில் 6 எம்.எல்.ஏ-க்கள் உள்ளோம். அமைச்சர் சாய் சரவணக்குமார் மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். பாஜகவில் 4 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறோம். எங்களுக்குள் பிளவு எதுவும் இல்லை என்று கூறினர். அதே நேரத்தில், பாஜக சட்டமன்ற கட்சித்தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயத்திடம், “ இந்த போராட்டம் உள்நோக்கம் கொண்டது. இதுபற்றி பாஜக தலைமை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.