புதுச்சேரி, ஏப்.18- மாநில அந்தஸ்து வழங்க மறுக்கும் பாஜகவை புதுச்சேரி மக்கள் புறமுதுக் கிட்டு ஓடச்செய்யவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் புதனன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, புதுச்சேரி ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநில அந்தஸ்தை வழங்க பாஜக மறுத்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக ரேசன் கடைகளே புதுச்சேரியில் இல்லாத நிலையை பாஜக ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரை பெண்கள் முற்றுகையிட்டு ரேசன் கடை களை திறக்க வேண்டும் என்று வலியுறுத் தினார்கள். அப்போது முதல்வர் ரங்கசாமி தேர்தல் முடிந்த உடன் ரேசன் கடைகள் திறக்கப்படும் என்று நாடகமாடி வருகிறார். எனவே கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசால் புதுச்சேரிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அரசுத்துறையாக உள்ள மின் துறையை தனியாருக்கு தாரைவார்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மயமாகும் ஆபத்தில் மின்வாரி யம் உள்ளது. மூடப்பட்டுள்ள பஞ்சாலை களை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள மோடி அரசை தூக்கி எரிய நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். புதுச்சேரி மக்களை வஞ்சித்த பாஜகவை புறக்கணித்து புறமுது கிட்டு ஓடச்செய்யவேண்டும். உரிமையை நிலைநாட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது,மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா,பெருமாள்,பிரபுராஜ்,கொளஞ்சியப்பன்,சத்தியா ஆகியோர் உடன் இருந்தனர்.