திருவள்ளூர், மார்ச் 2- தொகுப்பு வீடுகளை அந்தந்த பயனாளி களை கொண்டு கட்டப்பட்ட வேண்டு மென்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி, நரச மங்கலத்தில் பழங்குடி மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், தொடர் போராட்டம் நடத்தப் பட்ட பிறகு தொடுகாடு ஊராட்சியில் 2022 ஆம் ஆண்டு 14 நபர்களுக்கு குடிமனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு தொகுப்பு வீடுகள் கட்ட கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பணி ஆணை வழங்கி யுள்ளனர். இந்த நிலையில் இருளர் இன மக்கள் தங்கள் வீடுகளை கட்டுவதற்கான ஏற்படுகளை செய்து வந்தனர். இந்த சூழலில் ஒப்பந்ததாரர்கள் சிலர் தொடுகாடு ஊராட்சிக்கு சென்று இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தில், பயனாளிகளின் அனுமதி இல்லாமலேயே வெள்ளியன்று (மார்ச் 1), ஜேசிபி இயந்திரங்களை கொண்டு 14 வீடுகள் கட்ட பள்ளம் தோண்டியுள்ளனர். எங்கள் அனுமதியின்றி ஏன் ஜேசிபி இயந்திரத்தை வைத்து பள்ளம் எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அம்மக்களை மிரட்டியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவிக்கையில், ஒரு தொகுப்பு வீடு கட்ட அரசு ரூ.4.லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்குகிறது. இதனை பயனாளி களுக்கு மூன்று தவணையாக கொடுக் கின்றனர்.இந்த பணத்தை கொண்டு கழிவறையுடன் கூடிய கான்கிரீட் வீடு கட்ட வேண்டும். அரசு ஒதுக்கியுள்ள பணத்தில் தரமாக வீடு கட்ட முடியாது.அந்தந்த பயனாளிகள் தங்களிடம் உள்ள நகைகளை அல்லது வட்டிக்கு பணத்தை வாங்கி கட்டுவதுதான் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் ஒப்பந்ததாரர் சிலர் தரமற்ற சிமெண்ட் மற்றும் பொருட்களை கொண்டு தொகுப்பு வீடுகளை கட்டி விட்டு சென்று விடுவார்கள். அது அடுத்த மழைக்கே தாங்காது. இடிந்து விழும் நிலை தான் ஏற்படும். தொகுப்பு வீடுகளை பொருத்த வரை அந்தந்த பயனாளிகள் தான் கட்ட வேண்டும் என்று சட்டம் உள்ளது. அப்போது தான் வீடு தரமாக இருக்கும். இந்த தொகுப்பு வீடுகளை ஒப்பந்ததாரர்கள் கட்டுவது, அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடு வதாகும். இதில் பல லட்சக்கணக்கான ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடத்த ஒப்பந்த தாரர் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒப்பந்ததாரர்கள் பள்ளம் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், அந்தந்த பயனா ளிகளே தொகுப்பு வீடுகளை கட்டி வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும். அப்பாவி மக்களை மிரட்டும் ஒப்பந்ததாரர்கள் மீதும், இவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.