15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி தீர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் (பிப்.13) வியாழனன்று காஞ்சிபுரம் பேருந்து போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் காஞ்சிபுரம் மண்டல தலைவர் எஸ்.மாயக்கண்ணன் தலைமையில் பொதுச் செயலாளர் பி.சீனிவாசன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி டி.தமிழ்ச்செல்வன், இணைச் செயலாளர் ஜி.முரளி, இணை பொதுச் செயலாளர்கள் ஏ.வெங்கடேசன், ஏ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேசினர்.