districts

img

‘தமிழ் அழிக்க முடியாத மொழி’

வேலூர், மே 20 - தமிழியக்கம் விஐடியின் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய மன்றம் செந்தமிழ் திருத்தேர் தூய தமிழ் மாணவர் இயக்ககம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான தூய தமிழ் பயிலரங்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் மே 17,18,19ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இதன் நிறைவு விழா விஐடி பல்கலைக் கழகத்தில் வேந்தரும் தமிழியக்க நிறுவனத் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை யில் நடைபெற்றது. அவர் தனது தலைமை உரையில்,“ தமிழ் மொழியின் முக்கியத்து வம் வரலாறு என்பது இன்னும் தமிழர்கள் பலருக்கு தெரியவில்லை. அதற்கான பணிகளில் தமிழியக்கம் தொடர்ந்து செய லாற்றி வருகிறது” என்றார். தற்போதைய தொழில்நுட்ப சொற்களை தமிழில் மென்மேலும் சேர்க்க வேண்டும். அதற்கான அடித்தளத்தை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமாகும் என்றும் அவர் கூறினார். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்கக முன்னாள் இயக்குநர் தங்க காமராசு பேசுகையில், “பிறமொழி கலப்பால் தமிழ் மொழி மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. எனினும் தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது,ஆனால் அதனைப் பிற மொழி கலப்பிலிருந்து காப்பாற்ற முடியும். அத்தகையதொரு சிறப்பான பணியை தமிழியக்கம் செய்து வருகிறது”என்றார். முன்னதாக பயிலரங்கில் பயிற்சி பெற்ற 100 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வேந்தர் கோ. விசுவநாதன் வழங்கினார். இதில் தமிழியக்கத்தின் பொதுச்செயலாளர் கவியருவி அப்துல் காதர், மாநில செயலாளர் சுகுமார், பொருளாளர் புலவர் பதுமனார்,அமைப்புச் செயலாளர் வணங்காமுடி, இளங்கவி திவாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.