நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 146 உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்த மோடி அரசின் சர்வாதிகாரத்தை கண்டித்து வியாழனன்று (டிச.21) அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதி தலைவர் யூஜின் பர்க், மாற்றுத்திறனாளிகள் சங்க பகுதி செயலாளர் சதாசிவம், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் சி.மார்ட்டின், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பகுதி பொருளாளர் என்.ஜோதி உள்ளிட்டோர் பேசினர்.