districts

img

மழை நீர் தேங்கும் தற்காலிக பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

புதுச்சேரி, ஜூலை 6- புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் இயங்கி வந்த புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள்  நடைபெறும் வரை புதுச்சேரி கடலூர் சாலை யில் உள்ள ஏ.எஃப்.டி. மைதானத்திற்கு பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு பெய்த கனமழையால் ஏ.எஃப்.டி. மைதானத்தில் மழைநீர் வெளியேற முடியாமல் பேருந்து நிலையம் சேரும் சகதியுமாக மாறியது. பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  ஆட்சியர் ஆய்வு பயணிகளின் புகாரை அடுத்து  ஆட்சியர்  குலோத்துங்கன்,  நகராட்சி ஆணையர் கந்த சாமி உடன் தற்காலிக பேருந்து நிலையத் திற்கு சென்று மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். மேலும் சேரும் சகதியுமாக இருந்த பேருந்து நிலையத்தின் உட்புறப் பகுதிகளில் அதிக அளவில் மண்ணைக் கொண்டு சமம் செய்து உரிய நடவடிக்கை  எடுக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.