districts

சென்னை முக்கிய செய்திகள்

அம்பத்தூர் பால்பண்ணையில் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தம்

சென்னை,ஜூலை 27- அம்பத்தூர் பால்பண்ணையில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு சுமார் 20 நாட்கள் நடைபெற உள்ளதால் பால் உற்பத்திக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள மற்ற பால் பண்ணைகளிலும் மற்றும் பாடலூர் பால் பண்ணை யில் இருந்தும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை யாளர்களுக்கு விநியோகிக்கப்படும். எனவே பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பால் விநி யோகிக்க அனைத்து வகையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று ஆவின் நிறுவனம் தெரி வித்துள்ளது.

ஒரு லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி கூடங்குளம் அணுமின் நிலையம் சாதனை

திருநெல்வேலி,ஜூலை 27- கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு லட்சம் மில்லியன் யூனிட் மின்சா ரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. கூடங்குளம் அணுமின் திட்டத்தின் 2X1,000 மெகாவாட் உலைகள் ரஷ்யாவின் ரோசாட்டம் ஸ்டேட் கார்ப்பரேஷனின் தொழில்நுட்பத்துடன் நிறு வப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின்  நிலையம் (ஜூலை 26, 2024) வெள்ளிக்கிழமை நூறு கோடி யூனிட் (ஒரு பில்லி யன் யூனிட்) மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் தொகுப்பிற்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.  2013-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி  கூடங்குளம் அணு உலை-  1 இதுவரை 57,030 மில்லி யன் யூனிட் உற்பத்தி செய்துள்ளது, அதே சமயம் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 மாதம் இரண்டாவது யூனிட் 42,993 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. இரண்டு உலைகளும் கிட்டத் தட்ட 1,00,024.40 மில்லியன் யூனிட் சுத்தமான மின் சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. 86 மில்லியன் டன்களுக்கு மேல் கரியமில வாயுவை வளி மண்டலத்தில் வெளி யிடுவதை மறை முமாகத்தவிர்த்துள்ளது. இந்தத் தகவலை கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஜாய் பி.வர்கீஸ் தெரி வித்தார். தற்போது, ​​இரண்டு அலகுகளும் வழக்கமான முறையில் செயல்படு கின்றன.  சுமார் 50 மில்லியன் இந்தியக்  குடும்பங்களுக்கு மின்சாரம்  வழங்குவதற்கு திட்டமிடப் பட்டதைவிட அதிக செயல் திறனை அணுமின்நிலையம் கொண்டுள்ளது. கூடங்குளத்தின் இரண்டு  உலைகள் தற்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து வரு கின்றன. இங்கு உற்பத்தி யாகும் மின்சாரம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா  மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மக்களுடன் முதல்வர் முகாம்

கள்ளக்குறிச்சி ஜுலை 27 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடைபெற்ற முகாம்களில்  துறை வாரியாக மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 30.7.2024 செவ்வாய்க்கிழமை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய கொள்ளியூர் கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் குலதீபமங்கலம் கிராமத்திலும், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருநாவலூரிலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நெடுமானூர் கிராமத்திலும், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கரடிசித்தூர் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது., இம்முகாமில் சம்பந்தப்பட்ட கிராமப் பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்  கூறியுள்ளார்.

வேலூரில் வானவில் மன்ற கருத்தாளர்கள் தேர்வு

வேலூர், ஜூலை 27 - அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், ‘வானவில் மன்றம்’உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு நேர்காணல் வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம் அறிவியல் இயக்க வேலூர் மாவட்டத் தலைவர் பேரா.அமுதா, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், மேனாள் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி, வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சா.குமரன், கே.விசுவநாதன்,  திருவண்ணாமலை சிவக்குமார்,  ராணிப்பேட்டை நரசிம்மன், திருப்பத்தூர் நிக்சன் ராஜ் மற்றும் அரசு முஸ்லீம் பள்ளி தலைமை ஆசிரியர் கா.பாஸ்கரன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அறிவியல் தேசம், அதிசய மோதிரம் மற்றும் அறிவியல் பார்வையில் நல்ல நேரம், நல்ல காலம்  ஆகிய மூன்று புத்தகங்கள்  வெளியிடப்பட்டது.

ஊதிய உயர்வுக்கு ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி ஒப்புதல்

புதுச்சேரி, ஜூலை 27-  சிஐடியு போராட்டம் எதிரொலியாக ஊதிய உயர்வுக்கு புதுச்சேரி பொறியியல் கல்லூரி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதுச்சேரி அடுத்துள்ள கிருமாம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா உள்ளிட்ட காரணங்களை காட்டி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த 8 வருடங்களாக வழங்கப்படவில்லை.  இந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கையை முன்வைத்து சிஐடியு சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 3ஆம் தேதியில் இருந்து கல்லூரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் இரவு, பகலாக நடை பெற்றது. இறுதியாக ஜூலை 22ஆம் தேதி கல்லூரி வளாகம் எதிரில் உள்ள கடலூர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  பின்னர் சிஐடியு சங்கத்தின் தலைவர்கள் ராமசாமி, கொளஞ்சியப்பன், சீனிவாசன், பிரபுராஜ், கலியன் மற்றும் ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து   கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சு நடத்தினர். அப்போது கல்லூரி நிர்வாகம்  சார்பில் ஊதிய உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உடன்பாட்டின் மூலம் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 2,200 முதல் அதிகபட்சம் ரூ. 3,400 வரை ஊதிய உயர்வு  கிடைக்கும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணி கொடைகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்க வேண்டும். வேலை நிறுத்த காலத்தில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் முழுவதும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் ஒப்புக் கொண்டது-

கடற்கரை – எழும்பூர் புறநகர் ரயில் சேவை இன்று ரத்து

சென்னை, ஜூலை 27- சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக  ஞாயிறன்று  (ஜூலை 28)  காலை 7.45 முதல் இரவு 7.45 வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.  அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பகல் 1 மணி மற்றும் இரவு 10.30க்கு மேலான ரயில்கள் ரத்து என முன்பே கூறப்பட்டிருந்தது. அந்த நேரங்களில் மட்டும் பல்லாவரம்-எழும்பூர், கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.