districts

தமிழகம்,புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்

சென்னை,ஆக.5-

     சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-  

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 11-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும்  என்று சென்னை  வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கை யில், ஞாயிறன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல் பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிக மாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரி யம் ஏற்படலாம். சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத் திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சி யஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.