சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியஜனநாயகவாலிபர்சங்கம், மாணவர்சங்கம் சார்பில் வியாழனன்று(டிச.19) சைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர்விடுதி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்சங்க தென்சென்னை மாவட்டத்தலைவர் ச.ஆனந்தகுமார் தலைமையில் வாலிபர்சங்க மாவட்டச்செயலாளர் தீ.சந்துரு, சுவேதா, அனாமிகா(எஸ்எப்ஐ), மகேஷ், ராஜ்குமார் (வாலிபர்சங்கம்) ஆகியோர் பங்கேற்றனர். காம்ரேட் டாக்கிஸ் தினேஷ், பிரசாத், பள்ளிமாணவர் இளமாறன் ஆகியோர் அம்பேத்கரை நினைவுகூர்ந்து பாடல்களை பாடினர்.