விஐடி சென்னை வளாகத்தில் சர்வதேச டெக்னோ – விஐடி 24’ என்ற தொழில்நுட்ப திருவிழாவின் தொடக்க விழா வியாழனன்று நடைபெற்றது. விழாவுக்கு விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கீதம் பல்கலைக்கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீபரத் மதுகுமிலி , பாஷ் டெக்னாலஜி இணைய இணைப்பு நிறுவனத்தின் தொழில் நுட்ப பிரிவு தலைவர் குரு பிரசாத், விஐடி சென்னை இணை துணைவேந்தர் முனைவர் டி.தியாகராஜன், வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், மாணவர் நலன் இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.