சென்னை,அக்.6- சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) இயந்திரவி யல் துறையின் சார்பில் தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கம் “KRATORQ 2023” வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற்றது. இயந்திரவியல் துறைத்தலைவர் ஆர்.ராஜாராமன் முதல்வர் சி.வி.ஜெயக்குமார், துணை முதல்வர் சி.கோமதி ஆகியோரின் உரையுடன் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்றன. சென்னை அசோக் லேலன்டு துணை மேலாளர் ஏ ஆர் அரவிந்த் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பொறியியல் பரிணாமம், உற்பத்தி களத்தில் சமீபத்திய போக்குகள், தரக் கட்டுப்பாடு மற்றும் உத்தரவாதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும், எதிர்கால பொறியாளர்களுக்கு தேவையான திறன்கள் மற்றும் உற்பத்தி களத்தில் வேலை வாய்ப்புகள் பற்றிய பல தகவல்களை அவர் வழங்கினார். இறுதியாக இயந்திரவியல் பிரிவு உதவி பேராசிரியர் ஆர்.ஏ. அருள்ராஜா நன்றி கூறினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200 மேற்ப்பட்ட மாணவர்கள் ஊக்கத்துடன் பங்கேற்றனர்.