யூஜிசி வரைவு அறிக்கை 2025 ஐ திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல பொருளாளர் ஜே. சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கிளை தலைவர் திலக்குமார், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஹென்றி, ராஜலட்சுமி, ராஜ்குமார் மற்றும் மூத்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் சாந்தி, ஷர்மிளா, அன்பரசி மற்றும் பல பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.