தாம்பரம்,ஜூலை 18-
பழைய பெருங்களத் தூர், பார்வதி நகர் பகுதி யைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பை யில் உள்ள தனியார் பள்ளி யில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வ தற்காக தனது மகள் தீபிகா (வயது 21) உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மதனபுரம் அருகில் ஏற்கெ னவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியை கடக்க முயற்சி செய்த போது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனி யார் பள்ளி வாகனத்தின் பின் சக்கரம் ஏறி இறங்கிய தில் படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.