districts

img

24 மணி நேரமும் டீ கடைகளை அனுமதிக்க வேண்டும்

சென்னை, நவ. 27 - உரிமங்களோடு உள்ள டீக்கடைகள் 24 மணி நேரமும் செயல்பட தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. ஆனால், காவல்  துறையினர் இரவு 10 மணிக்கு மேல் கடைகள் செயல்பட இடை யூறு செய்கின்றனர். எனவே, அர சாணையை அமல்படுத்த காவல் துறைக்கு தமிழக அரசு அறி வுறுத்த வேண்டும் என்று டீ கடை உரிமையாளர்கள் சங்கம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் 42வது பொதுப்பேரவை ஞாயி றன்று (நவ.26) காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், பிளாஸ்டிக் பூச்சு இல்லாத காகித கப்புகளை பயன்படுத்த தமிழக அரசு அனு மதித்துள்ளது. எனவே, அக்குவா பேஸ்ட் கப்புகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வணிக உரிமம், தொழில் உரிமம், உணவு பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை ஒற்றை சாளர முறையில், ஒரே இடத்தில் வழங்க வேண்டும். முதலமைச்சர் அறிவித்த படி, 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் முறை செயல்படுத்த வேண்டும், மாதாந்திர மின் கணக்கீட்டு கட்டண முறையை செயல்படுத்த வேண்டும், வணிக சிலிண்டர்களை மானிய விலையில் அல்லது ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவைக்கு சங்கத்தின் தலை வர் டி.ஆனந்தன் தலைமை தாங்கி னார். செயலாளர் இ.விஜயகுமார் (எ) சுந்தரம் வரவேற்றார். வரவு செலவு அறிக்கையை பொரு ளாளர் சி.கே.தாமோதரன் சமர்ப்பித்தார். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊக்கத் தொகையை வழங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, சென்னை ஓட்டல் சங்க செயலாளர் பேரா.ஆர்.ராஜ்குமார், நவோதயா சுரேஷ்பாபு, சங்கத்தின் துணைத் தலைவர் கே.டி.கே.அரவிந்தின் உள்ளிட்டோர் பேசினர். நிர்வாகிகள் சங்கத்தின் தலைவராக டி.அனந்தன், செயலாளராக இ.விஜயகுமார் (எ) சுந்தரம், பொருளாளராக சி.கே.தாமோதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.