இ.கே.நாயனார் நகர் (கண்ணூர்), ஏப். 9- “ஒரு காலத்தில் இமாச்சலப் பிரதே சத்தின் செழுமையின் அடையாளமாக விளங் கிய ஆப்பிள் இப்போது விவசாயிகளின் கண்ணீர் பழமாக உள்ளது. ஒவ்வொரு ஆப்பிளிலும் இருப்பது அந்த கண்ணீரின் உப்புதான். ஆப்பிள் விவசாயிகளின் அவல நிலைக்கு ஒன்றிய அரசின் கொள்கை களே காரணம். பல்வேறு வர்த்தக ஒப்பந் தங்களின் ஒரு பகுதியாக மேற்குலக நாடுக ளில் இருந்தும், துருக்கி மற்றும் ஈரானில் இருந்தும் ஆப்பிள் இறக்குமதி செய்யப்படு கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து வரி இல்லாமல் ஆப்பிள் இறக்குமதி செய்யப் படுகிறது. அதன் மூலம் இமாச்சல் ஆப்பி ளின்செல்வாக்கு சரிந்தது. போராடுவதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை என்று சிபிஎம் இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் மாநிலச் செயலாளரும் தியோக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராகேஷ் சின்கா கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் சீரழிந்துள்ள விவசாயத் துறையின் பிரச்சனைகளை முன்வைத்து சிபிஎம் வலுவான போராட்டத் தை நடத்தும். காய்கறி சாகுபடியும் நலிவ டைந்து வருகிறது. ஆப்பிள் சந்தைப்படுத் தல் அமைப்பு செயலிழந்தது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளே இமாச்சலில் அதிக அளவில் உள்ளனர். பெரிய நில உரிமையா ளர்கள் மிகக் குறைவு. இவர்களில் பெரும்பா லானோர் அரை ஹெக்டேர் முதல் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ளனர். இந்த விவசாயிகளின் பிரச்சனைகள் மீதான தலையீடுக்கு பிறகு, சிபிஎம் புதிய பகுதிகளுக்குள் நுழைய முடிந்துள்ளது. போராட்டங்கள் மூலம் விவசாயிகளின் நம் பிக்கையை பெறுவது சாத்தியமாகி வரு கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சிபிஎம்முக்கு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே. கட்சியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக் கும் அது ஒரு அளவுகோலாக இருக்க முடி யாது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தலித்துகளின் போராட்டங்களை ஒழுங்கமைத்து கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வது சாத்தியமாகி உள்ளது. பஞ்சாப்பிற்கு அடுத்தபடியாக தலித் மக்கள் அதிகம் உள்ள மாநிலம் இமாச்சல் பிரதேச மாகும். இங்கு தலித்துகள் மீதான சமூக மற்றும் பொருளாதார சுரண்டல் தலைவிரித் தாடுகிறது. இது பன்முகப் போராட்டங்களு க்கு சாத்தியமுள்ள இடமாகும். முதலா ளித்துவ கட்சிகள் செல்வாக்கு இழக்கும் பகுதி களில் சிபிஎம் வளர முடியும். அங்கன்வாடி உள்ளிட்ட திட்டப் பணியாளர்களின் போராட் டங்களும் குறிப்பிடத்தக்கவை. 1950களில் இடதுசாரிக் கட்சிகள் நடத்திய வலுவான போராட்டங்களின் விளை வாக குறைந்த அளவிலேனும் சில நிலச் சீர்தி ருத்தங்களைச் செய்த மாநிலம் இமாச்சலப் பிரதேசம். காங்கிரசும் பா.ஜ.கவும் இயல் பாகவே உயர்குடியினரின் பிரதிநிதிகள். இவர்கள் மாறி மாறி ஆட்சி செய்யும் போதி லும் விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்சனைகள் புறக்கணிக்கப்படுகின்றன. சிபிஎம் இந்தப் பிரிவினரின் பிரச்சனைக ளைக் கையில் எடுத்து வலுவான போராட் டத்தை நடத்தும் என்று ராகேஷ் சின்கா கூறினார்.