திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பத்தில் அருந்தியர் மற்றும் இருளர் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.மழை காலத்தில் குடிசைகள் ஒழுகாமல் இருக்க எய்டு இந்தியா என்ற தொண்டு நிறுவனம் சார்பில் செவ்வாயன்று (அக் 1), பில்லா குப்பத்தில் உள்ள 59 இருளர் மற்றும் அருந்ததிய குடும்பங்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, விதொச வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன், வாலிபர் சங்கத்தின் நிர்வாகி வசந்த் பௌத்தா,தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் அபர்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.