கிருஷ்ணகிரி, ஆக. 30- ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிடுகரப் பள்ளியிலிருந்து பின்புறமாக வாசவி நகர், தின்னூர், செல்லும் வண்டி பாதை 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் மிடுகரப்பள்ளி ஒட்டியுள்ள ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாட்டுக்கும் செல்ல வேண்டும். இந்த சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் இல்லாத தால் அருகில் உள்ளவர்கள் அரை ஏக்கர் வரை சுடுகாட்டை ஆக்கிரமித்து பயன் படுத்தி வருவதாக மக்கள் கூறுகின்றனர். அரசு அதிகாரிகள் வாய் மூடி மௌனமாக உள்ளனர். சுடுகாட்டு ஆக்கிரமிப்பை மீட்டு சுற்றுச்சுவர்,தண்ணீர் வசதி,மண்டபம், வண்டிப்பாதையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தொடர்ந்து 40 ஆண்டு களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதன் காரணமாக மீதம் இருக்கும் சுடு காட்டு நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு கிராமத்தில் பின்புறம் உள்ள வண்டிப்பாதை தார் சாலையாக போடப்பட்டது. அப்போது கடைசி வீட்டுக்காரரான குமார் என்பவர்அவர் வீட்டின் முன்பு சாலை போடக்கூடாது என எதிர்ப்பு தெரி வித்ததால் அத்தோடு நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்று நாட்க ளுக்கு முன்பு சுடுகாட்டிலிருந்து பின்புறம் கிராமத்தின் முகப்பு வரை ஊருக்குள் வரும் சாலை தார் சாலையாக போடப்பட்டது. அதே குமார் என்பவர் அவர் வீட்டின் முன்பிருந்து அருகிலுள்ள நிலம் ஓரமாக செல்லும் சுமார் 80 அடி நீளம் பகுதியை தார்சாலை போட அனுமதிக்க முடியாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர்கள் பிணத்தை எங்கள் வீட்டின் வழி யாக எடுத்துச் செல்ல அனுமதிக்க முடி யாது என்று கூறியதாகவும் தெரிய வரு கிறது.ஒரு தனி நபரின் எதிர்ப்புக்கு பயந்து நடுவில் சுமார் 80 அடி மட்டும் தார் சாலை போடாமல் ஒப்பந்ததாரர் மண்சாலையாகவே விட்டுச்சென்றுள்ளார். எனவே ஓசூர் சாராட்சியரும், மாநக ராட்சி நிர்வாகமும் உடனடியாக தலை யிட்டு பொது சாலையில் தார் போடப்படா மல் உள்ள 80 அடி பகுதியை உடனடி யாக தார் சாலை அமைத்திடவும் சுடு காட்டின் ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச் சவர்,மண்டபம் தண்ணீர் வசதி செய்து தரவும்,உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் நாகேஷ் பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.