districts

img

செங்கல்பட்டில் தமுஎகச முப்பெரும் விழா

செங்கல்பட்டு,நவ. 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், சிந்து வெளி அகழாய்வு நூற்றாண்டு தொடக்க விழா, முற்போக்கு பொது வுடைமை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா செங்கல்பட்டில் நடை பெற்றது. தமுஎகச செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கவி சேகர் தலைமையில் பொரு ளாளர். என்.டி.அரங்கநாதன் வரவேற்றார். மாவட்ட தலைவர். இ.சங்கரதாஸ் தமுஎகச கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் தொழிலாளி வர்க்க ஒற்று மையை பாதுகாக்கும் போராட்டத்தையும் ஒன்றி ணைத்து கவிஞர் தமிழ்ஒளி போராடியதை சுட்டிக்காட்டி கவிஞர் ஆயிஷா பேசினார். தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கு.ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார். மக்களிசை பாடல்களை  பாடகர்கள் ஸ்டாலின்குமார், அ.சரண்யா, கு.முகுந்தன் ஆகியோர் பாடினர். தமுஎகசவின் மாநிலக் குழு உறுப்பினர் பாவலர். சு.சண்முகசுந்தரம் தமிழ்ஒளி எனும் பெருங்கவிஞன் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். நிறைவாக மாநில பொதுச் செயலாளர். ஆதவன் தீட்சண்யா ‘சிந்து வெளி அகழாய்வு உண்மை யும் திரிபும்’ எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றினார். சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர். மு.முனிச்செல்வம் நன்றி கூறினர்.