ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராசன் புதனன்று (மார்ச் 20) பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வந்தார். அவருக்கு வரவேற்பு தரும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராம் தெருவில் பாஜகவினர் கொடி நட்டு வைத்திருந்தனர்.