சென்னை, மார்ச் 27 - தென் சென்னை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் புதனன்று (மார்ச் 27) சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 189வது வார்டு பள்ளிக்கரணை, 190வது வார்டு ஜல்லடியான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருடன், அமைச்சர் மா.சுப்பிர மணியன், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேட்பாளருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து, பொக்லைன் எந்திரம் மூலம் மலர்த்தூவி திமுகவினர் வரவேற்றனர். பிரச்சாரங்களில் பேசிய வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பள்ளிக்கரணை பகுதியின் பிரதான பிரச்சினையாக உள்ள சதுப்புநிலம் குறித்து பலமுறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினேன். அதன் பயனாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தொடர்ந்து இந்த சதுப்புநிலத்தை பாதுகாத்து சென்னை யில் சுற்றுச்சூழலை மேம்படுத்த திமுக பாடு படும் என்றும் அவர் கூறினார். பள்ளிக்கரணை பகுதி முழுவதும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புறநகர்ப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர வாக்களி யுங்கள் என்று கேட்டார். இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் பி.ஜெயவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எம்.ஆர்.சுரேஷ், விசிக மாவட்டச் செய லாளர் இளையா (விசிக) உள்ளிட்டு நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.