districts

img

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்

சென்னை, ஆக. 7 - சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வலியுறுத்  தினார். தில்லியில் அமைச்சரை சந்தித்து பேசிய அவர், அம்ருத் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தின் நடைமேடை விரிவாக்கம், நகரும் படிகட்டுகள் அமைத்தல், கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளம் வசதி ஏற்படுத்துதல், நவீன வசதிகளுடன் கூடிய பயணச்சீட்டு வழங்குமிடத்தை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்றார். நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள கடைகளிலும், பெண் பயணிகளின் அவசரத் தேவைக்காக சானிட்டரி நாப்கின் வைத்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சானிட்டரி நாப்கின்  வழங்கும் தானியங்கி இயந்திரத்தை அமைக்க வேண்டும் என்றும் கோரினார். உதவி மையம் மக்களவையில் நேரமில்லாத நேரத்தில் பேசிய தமிழச்சி தங்க பாண்டியன்,  சோழிங்கநல்லூர் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில்  அனைத்து நாட்களும் செயல்படும்  24 மணி நேர பெண்கள் உதவி மையத்தை ஒன்றிய அரசு உடனடியாக திறக்க ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.