சென்னை, செப். 22- மதுரையில் நடைபெற்ற சுற்றுலா தொடர்பான கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் கே.லட்சுமி நாராயணன், ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறையின் மண்டல இயக்குநர், சட்ட மன்ற உறுப்பினர் மு.பூமி நாதன் ஆகியோர் விருதுகளை வழங்கி னார். இதில் எழும்பூர் பாண்டியன் ஓட்டல் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. வாசுதேவனுக்கு விருந்தோம்பல் துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ 2024ஐ தமிழ்நாடு சுற்றுலாத் துறை, ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் ஆதரவுடன் டிராவல் கிளப்-மதுரை, இந்திய தொழில் கூட்டமைப்பு, தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் இணைந்து நடத்தின.