கிருஷ்ணகிரி,நவ.30- தமிழ்நாடு அறிவியல் இயக்க ஓசூர் மாநகர மாநாடு மெரினா புக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. சண்முகம் பக்தவச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வரவேற்றார்.செயலாளர் சத்தியமூர்த்தி செயல் அறிக்கையை வாசித்தார். பொருளாளர் சூர்யா வரவு செலவு சமர்ப்பித்தார். மூத்த எழுத்தாளர் சு.பொ.அகத்தியலிங்கம், சமூக மாற்றத்திற்கான அறிவியல் குறித்து பேசினார். முன்னதாக நடைபெற்ற குழந்தைகள் பேச்சுத்திறன் ஊக்க பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தலைவராக சண்முகம்,செயலாளராக பாரதிதாசன்,பொருளாளராக செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.