கிருஷ்ணகிரி,அக்.31- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட அமைப்பு குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் லெனின் முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் க. உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.சிசுபாலன், திமுக, காங்கிரஸ், தி.க, விசிக, சிபிஐ, சிபிஎம், தமுமுக, ஐயூஎம்எல், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், சாலி டாரிட்டி, மற்றும் வெகுஜன அமைப்புக்களின் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 25 பேர் கொண்ட மாவட்ட அமைப்பின் ஒருங் கிணைப்பாளராக லெனின் முருகன் செய்யப்பட்டார்.