மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி தமிழ்நாடு முழுவதும் இரங்கல் ஊர்வலம் மற்றும் அஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய வட மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் டி.எம்.ஜெய்சங்கர், கோ.மாதவன், என்.சுப்பிரமணியன், நஞ்சுடன், எம்.சிவக்குமார், என்.காசிநாதன் மற்றும் இரா.ராஜாங்கம், திமுக, காங்கிரஸ், விசிக தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிபிஎம் தாலுகா செயலாளர் லட்சுமணன் தலைமையில் செங்கம் பேருந்து நிலையம் அருகே புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, பேரூராட்சித் தலைவர் சாதிக்பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.