கல்லூரி மற்றும் உயர்கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு ஆகியோரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் இராம.நடேசன், ஆர்.ஆளவந்தார், எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜி.ராசையன், டி.ராதாகிருஷ்ணன், கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.