காப்பக மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி தமிழக அரசு அரசாணை
சென்னை,அக்.12- தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்ப கங்களில் உள்ள மாணவி களுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப் பட்டது. இதை செயல்படுத்த ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, மொத்தம் 1,400 மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங் கப்படவுள்ளது. மேலும் பயிற் றுநர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமை யில் மாவட்ட சமூக நல அலுவ லர், மாவட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகி யோர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது.
‘ஆதிதிராவிடர் துறை பெயர் மாற்றம் முதல்வர் பரிசீலிப்பார்’
சிவகங்கை,அக்.12- சிவகங்கையில் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், “ஆதிதிரா விடர் நலத்துறை பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் தான் பரிசீலிப்பார். ஆதிதிராவி டர்களுக்கான நிதி முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்புவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். ஆதிதிராவிடர், பழங்குடியி னருக்கு நலத்திட்டங்களை விரைவில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகி றோம்” என்று தெரிவித்தார்.