தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநர் சிவ.சு.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.