பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (பிப்.23) சென்னையில் தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஆதரித்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார் பேசினார்.