திருவண்ணாமலை, செப். 5- செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கரும்பு விவசா யிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். தமிழ்நாடு மின்சார வாரியம் செய்யாறு சர்க் கரை ஆலைக்கு தரவேண் டிய ரூ. 90 கோடி இணை மின் கட்டணத்தை தமிழக அரசு பெற்றுத் தர வேண் டும், கரும்பு விவசாயத்தை பாதித்துள்ள வெட்டுக்கூலி பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி செய்யாறு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆலை கிளை தலைவர் பெ.அரிதாசு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ். வேல்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செய லாளர் ப. செல்வன், விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட தலைவர் உதய குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.