districts

சென்னை முக்கிய செய்திகள்

தமிழக அணியினருக்கு சிபிஎம் வாழ்த்து

உடுமலை, நவ. 3 - தேசிய அளவிலான 37ஆவது களரிப்பயட்டு போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் கோவாவில் நடை பெறுகிறது. இதில் இந்திய களரிப்பயட்டு கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கத்தின் சார்பில் மடத்துக்குளம் ‘பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை’யைச் சேர்ந்த எட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். கோவாவில் நடைபெறும் இந்த தேசியப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.  உடுமலை, மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த வீ.ஜீவா, கே.ருத்ரேந்தர், டி.விக்னேஸ் வரன், எம்.முத்துச்செல்வம், வி.தரன், எம்.விக்னேஷ், ஆர்.ராமச்சந்திரன், கே.விசாலி ஆகிய எட்டு பேர் தமிழக அணி யாக பங்கேற்கும்  நிலையில் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் பாராட்டி, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தார். இந்திய அணி சார்பாக கலந்து கொள்ளும் 18 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது.

பிஎம்சி கல்லூரியில்  வாக்காளர் விழிப்புணர்வு 

கிருஷ்ணகிரி,நவ.3- ஒசூர் பி.எம்.சி டெக் குழும வளாகத்தில் தமிழ்நாடு அரசின் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவர் பெ.குமார் தலைமை வகித்தார். செயலாளர் பெ.மலர், அறங்காவலர் பெ.சசிரேகா, இயக்குநர் சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூளகிரி வட்டாட்சியர் சக்திவேல், துணை வட்டாட்சியர் (தேர்தல்) ஜனனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொறியியல் கல்லூரி முதல்வர் சித்ரா துவக்க உரையாற்றினார். ‘வாக்களிப்பதே சிறந்தது - நான் நிச்சயம் வாக்களிப்பேன்’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கு பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், இளைஞர் செஞ்சிலுவை சங்க அருள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பின்றி தீர்வு காணப்படும்: அமைச்சர்

சென்னை, நவ.3- கோயம்பேடு சந்தையில் கடை வைத்தி ருப்பவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படா மல் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் உள்ள அண்ணா கனி அங்காடிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கோயம்பேடு அங்காடியில் 86 ஏக்கரில் காய்கறி அங்காடி, மலர் அங்காடி, கனி அங்காடி மற்றும் உணவு தானிய அங்காடி என 3,941கடைகள் அமைந்துள்ளன. இதில் கனி அங்காடியில் இருக்கும் 992 கடை கள், அந்த கடைகளிலே ஏற்படுகின்ற கழிவு கள், அந்த கழிவுகளை முறையாக அகற்று வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கா மல் தடுக்க 2.5 கி மீ தொலைவுக்கு மழைநீர் கால்வாய் புதிதாக கட்ட வேண்டும் என பொறியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் முதல் கட்டமாக இருக்கும் கால்வாயை தூர்வாரும் பணி விரைவில் தொடங்க உள்ளது. திமுக ஆட்சி ஏற்பட்ட பின் அங்காடி மேம்பாட்டுக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், நுழைவு வாயில் பொது அறிவிப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமராக்கள், உயர்மட்ட மின் விளக்குகள், சேதமடைந்த மின் விளக்கு களை புதுப்பித்தல் மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருந்தும் பணிகள் ரூ.13 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதுதவிர, அங்காடியை நவீனப்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், கோயம்பேடு மலர் அங்காடிக்கு அருகே எழில்மிகு பூங்கா, அங்காடியில் சூரிய ஒளி மின்சார கட்ட மைப்பை உருவாக்குதல், 24 மணி நேர ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை, அங்காடிக்கான பிரத்யேக இணைய வலைத்தளம் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பணியாணை வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு உணவு தானிய பகுதி மற்றும் பழ அங்காடியில் காலியாக உள்ள கடைகளை ஏலத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் சேரும் கழிவுகளை அகற்றும் ஒப்பந்த பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கோயம்பேடு சந்தையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் நேரத்தில், கடைகள் வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிரந்தர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காற்று மாசு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும்
சென்னை,நவ.3- உலக சுகாதார நிறுவ னம் நிர்ணயித்த வரம்பு களை விட சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளது.இந்த நிலையில்  காற்று மாசு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் என்று சென்னை மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காற்று மாசு காரண மாக சென்னை மற்றும்  டெல்லியில் வசிப்பவர் களுக்கு ‘டைப் 2’ நீரிழிவு  நோய் ஏற்படும் என்றும் கூறி யுள்ளனர்.சர்வதேச பத்திரிகைகளில் வெளி யான 2 ஆய்வு முடிவுகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன. இது  தொடர்பாக சென்னையில் 6,722 பேரிடமும், டெல்லி யில் 5,342 பேரிடமும் ஆய்வு செய்து அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தனர். 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.  தெற்காசியாவின் கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மையம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவின்படி அவர்கள் காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். மேலும் காற்று மாசு காரணமாக இளைஞர்களும் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆய்வில் காற்று மாசு அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்ப டும் என்றும் எச்சரித்துள்ள னர்.

 ஒய் 200 புதிய போன் அறிமுகம் 

சென்னை, நவ, 3- விவேவா, இந்தியாவில் விவோ ஒய் 200 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்ஃபோனில் 64 எம்பி ஓஐஎஸ் ஷேக் கேமரா, விவோவின் சமீபத்திய ஸ்மார்ட் ஆரா  லைட் தொழில்நுட்பம், 120  அல்ட்ரா விஷன் டிஸ்ப்ளே மற்றும் வேகமான  ஃபிளாஷ் சார்ஜ் உட்பட பல ஈர்க்கக்கூடிய  அம்சங்களை கொண்டுள்ளது. டெசர்ட் கோல்ட் மற்றும் ஜங்கிள் கிரீன் ஆகிய இரண்டு  அற்புதமான வண்ணங்களில் கிடைக்கிறது, ஒய்200 8ஜிபி+128ஜிபி விலை ரூ.21,999 மற்றும் அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா இ–ஸ்டோர் மற்றும் அனைத்து  ஆப்லைன் ஷோரூம்களிலும் கிடைக்கும். எஸ்பிஐ, இன்டசுஇண்டு, ஐடிஎஃப்சி பெர்ஸ்ட், யெஸ் வங்கி மற்றும்  பிற நிதிக் பார்ட்னர்களைப் பயன்படுத்தி வாடிக்கை யாளர்களுக்கு ரூ.2,500 வரை கேஷ்பேக்கைப் பெறலாம் என விவோ இந்தியா தெரிவித்துள்ளது.

கோயம்பேடு சந்தையில்  காய்கறிகள் தேக்கம்

சென்னை,நவ.3- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழனன்று  இரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருவதால்   கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை பாதியாக குறைந்தது.  தொடர்ந்து மழை பெய்ததால் அதிகாலை முதல் மார்க்கெட் வளாகம் முழுவதும் வியாபாரிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டது.குறிப்பாக பீன்ஸ்,கேரட், கத்திரிக்காய், முட்டை கோஸ் அதிக அளவில் தேங்கிய தால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது,  கோயம்பேடு சந்தைக்கு வெள்ளியன்று காலை 450க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.வழக்கமாக நடைபெறும் விற்பனையில் 50 விழுக்காடு  காய்கறிகள் மட்டுமே விற்றுள்ளது. ஏராளமான காய்கறிகள் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த பீன்ஸ் விலை குறைந்தது  என்றார்.

தாம்பரம் மாநகராட்சியில்  புகார் செய்ய தொலைபேசி எண் 

சென்னை,நவ.3- மழை வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனியாக தொலை  பேசி எண்கள், வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர்  அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொது மக்களுக்குப் பாதிப்பின்றி யும், போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகை யிலும்,மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மாநகராட்சிக் குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில்  12.461கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட் டுள்ளது. மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீட்புப் பணிகளை  மேற்கொள்ளவும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்புகொள்ள  கட்டணமில்லா தொலைப்பேசி எண் 18004254355, 18004251600, வாட்ஸ்அப் எண். 8438353355 மற்றும் துணை  ஆணையாளர் 9677257153 உதவி ஆணையர்கள் 7397382213, 7397382214 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு  அவர் கூறினார்.

மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் பலி

செங்கல்பட்டு,நவ.3- தாம்பரம் அருகே கணபதிபுரம் பகுதியில் வீட்டில் மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் உயிரிழந்தார். தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஐடி ஊழியரான  செந்தில் பிரசாத் என்பவர் தனது வீட்டின் பால்கனி அருகே மின்கம்பி தாழ்வாக சென்றது. இந்நிலையில் மின்கம்பியில் இருந்து  மின்சாரம் பாய்ந்ததால் அவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழலில்  வீடு இடிந்து விழுந்து பெண் பலி

சென்னை,நவ.3- புழலில் மழைக்கு வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புழல் அடுத்த லட்சமி புரம், சப்தகிரி நகரை  சேர்ந்தவர் முருகன்.  இறைச்சி கடைவேலை பார்த்து வருகிறார். இவரது  மனைவி லட்சுமி (வயது47). வியாழனன்று  காலை வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி லட்சுமி மட்டும்  இருந்தார். இந்நிலையில்  இரவு புழல் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் சேதம் அடைந்து இருந்த லட்சுமி வசித்த வீட்டின் மேற்பகுதி திடீ ரென விழுந்தது. இடிபாடு களில் சிக்கிய லட்சுமியால்  வெளியே வரமுடிய வில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.தனி வீடு என்பதால் லட்சுமி கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தது பக்கத்துவீட்டில் வசிப்பவர்களுக்கு தெரிய வில்லை.இதற்கிடையே இரவு 8.30 மணியளவில் முருகன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு இடிந்து விழுந்ததில் மனைவி லட்சுமி சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தி னர் உதவியுடன் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார்.

புதிய வேகக் கட்டுப்பாடு இன்று முதல் அமல்

சென்னை,நவ.3-  சாலை விபத்துகளுக்கு வாகனங்களில் அதிவேக மாக செல்வதே காரணம் என மத்திய நெடுஞ்சாலை துறை தெரிவித்து உள்ளது. இதையடுத்து வேகக்  கட்டுப்பாடு விதிமுறைகளை சென்னை காவல் துறை அறிவித்து உள்ளது. சனிக்கிழமை முதல் சென்னையில் கார், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், பேருந்து, லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங் கள், மோட்டார் சைக்கிள்கள்  மணிக்கு 50 கி.மீ வேகத்தி லும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும்  செல்லலாம். அதே வேளை யில் குடியிருப்பு பகுதிகளில்  அனைத்து வகை வாகனங்களுக்கும் 30 கி.மீ வேகத்துக்குள் தான் செல்ல வேண்டும் என பெரு நகர காவல்துறை இந்த அறிவிப்புக்கு இருக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளும் வகையில் மக்களிடமும், வாகன ஓட்டி களிடமும் சமுக ஊடகமான எக்ஸ் தளத்தில் சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு பக்கத்தில் கருத்துகள் கேட்கப்படுகின்றன. அதில் புதிய வேகக் கட்டுப்பாடு மிக சரியானதா, சரியானதா, மாற்றம் தேவையா என 3 பகுதிகளாக பிரித்து கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன.   புதிய வேகக் கட்டுப்பாடு 30 விழுக்காட்டினர் மிக சரியானதே என்றும், 15.9 விழுக்காட்டினர் சரியானதே என்றும்46 விழுக்காட்டினர் மாற்றம் தேவை என்றும்  கருத்துக்களை பதிவிட்டு  உள்ளனர்.மேலும் வாகனங்களின் வேகத்தை  கட்டுப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கை குறித்தும் தங்களது கருத் துக்களை பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.பொது மக்களின் கருத்துக் களின் அடிப்படையில் புதிய வேகக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர் பான முடிவுகள் எடுக்க பெருநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.