districts

img

கல்லூரி மாணவர்களின் திறமைத் திருவிழா

திருவண்ணாமலை, ஜன.1- திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம்  நடத்திய திறமைத் திருவிழா போளூரில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தின் தலைவர்  கருணாநிதி  தலைமை வகித்தார். கல்விக் குழுமத்தின் இணை செயலாளர் கே.வி. அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி வகித்த னர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இராம நாதன்,  குழந்தை வளர்ப்புக் கலை குறித்து மிகச் சிறப்பாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்தார். முன்னதாக, எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் காயத்ரி வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி. பொறி யியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பாஸ்கரன் மற்றும் எஸ்.கே.பி. பன்னாட்டுப் பள்ளியின் முதல்வர் ப்ரியா கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சையது ஜகிருத்தீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில்  திருக்குறள் ஒப்பு வித்தல்,  வண்ணம் தீட்டுதல், பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுதல், மாறுவேடம் அணிந்து வருதல்  போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்க ளுடைய திறமையை முழுமையாக வெளிப்  படுத்தினர். இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நிகழ்விலும் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாண வர்களுக்கு சிறப்பு விருந்தினர் தேவ கோட்டை  இராமநாதன் ரொக்கத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.