சென்னை, ஜன.29- 75வது குடியரசு தினத்தையொட்டி, சைதாப்பேட்டையில் ஜனவரி 26 மற்றும் 27 தேதிகளில் 135 வீரர்கள் கலந்து கொண்ட கிளப் அணிகளுக்கிடையே டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் சச்சின் (சைதை டேபிள் டென்னிஸ் சென்டர்) முதல் இடத்தையும், கார்த்திக் ( கமலநாபன் சென்டர்) 2 வது இடத்தையும் பிடித்தன. மாணவர்கள் பிரிவில் விதுர் கார்த்திக் (சைதன்யா பள்ளி) முதல் பரிசு, ஆதர்ஸ் (செட்டிநாடு பள்ளி) 2வது பரிசையும் பெற்றனர். ஒபன் பிரிவில் வாசு ( பிஎஸ்என்எல்), முதல் பரிசையும், ஆகாஷ் (கமலநாபன் டேபிள் டென்னிஸ் மையம் ) 2வது பரிசை யும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சான்று பெற்ற பயிற்சியாளர் இரா.எத்தி ராஜன் கோப்பைகளை வழங்கினார்.