districts

img

உதிரிரும் குருவிமலை பள்ளி கட்டிடம்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

காஞ்சிபுரம், ஜூலை 30 - குருவிமலை பள்ளிக்கூட மேல்தளப்பூச்சு பெயர்ந்து விழுந்ததை சீரமைக்க வேண்டுமென  மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட குருவி மலை  பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலை பள்ளி யில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு கடந்த  சில மாதங்களுக்கு பயன் பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பள்ளி  வளாகத்தில் புதிய  கட்டிடம்  மேல்தள சிமெண்ட் பூச்சு பெயர்ந்த விழுந்து பல்வேறு கல்வி உபகரணங்கள் சேதமடைந்தது. இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர்  ஆட்சியரிடம், மாணவர்களின் நலன் கருதி சேதமடைந்த கட்டி டத்தை ஆய்வு செய்ய மனு அளித்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தர வின் பெயரில்  கடந்த ஜூலை  9ஆம் தேதி பொதுப்பணித் துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில் பள்ளியில்  எந்த ஒரு முன்னெச்சரிக்கை மற்றும் மறு கட்டுமான பணி கள் எதுவும் நடைபெற வில்லை என அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும்  மாணவர்களின் பெற்றோர் கள் பள்ளிக்கு மாணவர் களை அனுப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.  ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக பள்ளி மறு கட்டமைப்பு செய்து  மாணவர்களின் பாதுகாப்பான படிப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.