districts

சிறுமியின் கால் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாதனை

தஞ்சாவூர், ஜூலை 22-

      தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 வயது சிறுமிக்கு  காலில் ஏற்பட்ட எலும்பு புற்றுநோய்க்கு  வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்  யப்பட்டது.

    இதுகுறித்து மருத்துவக் கல்லூரி  முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் செய்தி யாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரி வித்ததாவது:

    திருவாரூர் மாவட்டம் கோவிந்தகுடி யைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது கால்  எலும்பில் ஏற்பட்ட புற்றுநோயால் அவ திப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறு வதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்  லூரி மருத்துவமனையில் உள்ள புற்று நோய் அறுவை சிகிச்சை துறையில் உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டார்.

    இவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ச.மாரி முத்து, உதவிப் பேராசிரியர்கள் ப.முனி யசாமி, க.பாரதிராஜா அடங்கிய குழு வினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை  செய்தனர். இந்த அறுவை சிகிச்சை மிக வும் சிக்கலானது. இதற்கு முன்பு இந்த  மாதிரியான அறுவை சிகிச்சையில் காலை அகற்றுவதே முறையாக இருந்தது.  

    ஆனால் இந்த அறுவை சிகிச்சையின் போது காலில் உள்ள  புற்றுநோய் எலும்பு மட்டும் முழுவது மாக அகற்றப்பட்டு, அந்த இடத்தில் நவீன செயற்கை மூட்டு பொருத்தப் பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளார்.

    இதே சிகிச்சையை தனியார் மருத்து வமனையில் செய்தால் ரூ.5 லட்சம் செல வாகும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் முதல்வரின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்  இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.

பிளாட்டினம் தரச்சான்று

    தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு  மருத்துவமனை மகப்பேறு சேவையில்  சிறந்து விளங்குகிறது. இந்த மருத்துவ மனையில் தஞ்சாவூர் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன டைந்து வருகின்றனர். இதில், நாள்  தோறும் 40-55 பிரசவங்கள் நடைபெறு கின்றன. இதில் 20-25 மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிக்கல்  நிறைந்த பிரசவங்கள் பார்க்கப்பட்டு,  கர்ப்பிணிகள் காப்பாற்றப்படுகின்றனர். தமிழ்நாடு அளவில் இந்த மருத்துவ மனை பிரசவம் மற்றும் சிக்கல் நிறைந்த  பிரசவங்கள் பார்ப்பதில் முதலிடம் வகிக்கிறது.

  இவ்வாறு பாலாஜிநாதன் தெரி வித்தார்.