கடலூர், ஆக.23- தமிழகத்தில் குழந்தை கள் மற்றும் பெண்கள் அதிகளவு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு குடற்புழு தொற்று ஒரு காரணமாக உள்ளது. எனவே அதனை தடுக்கும் பொருட்டு ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்கம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட சோல்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி மாணவிகளுக்கு நீக்க மாத்திரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ. ஐய்யப்பன், மாநகர மேயர் சுந்தரி ராஜா, மாநகர துணை மேயர் தாமரைச் செல்வன், மாநகர ஆணை யாளர் அனு, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஹிரியன் ரவிகுமார், துணை இயக்குநர் பொற்கொடி, மாநகர நல அலுவலர் எழில் மதனா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5,50,764 நபர்க ளுக்கு குடற்புழு நீக்க மாத்தி ரைகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் துவக்கி வைத்தார். முதற் கட்டமாக, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நீக்க மாத்திரைகளை வழங்கினார். திருவண்ணாமலை, திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பள்ளி மாண வர்களுக்கு மாத்திரையை வழங்கினார்.