திருவள்ளூர், ஜூன் 2- கோடைகாலத்தில் பள்ளி மாணவர்க ளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க கோடைக்காலம் அறிவியல் பயிற்சி முகாம் திருநின்றவூர் பெரியார் நகரில் மே 24 அன்று தொடங்கி 31 ம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற முகாமில் 35 மாண வர்கள் பங்கேற்றனர். அறிவியல் திருவிழா கிளைச் செயலாளர் தேவி மதிவாணன் தலைமையில் மாவட்டத் தலைவர் ஆசிரியர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் மோசஸ் பிரபு , பௌர்ணமி, பச்சையம்மாள் ஆகியோர் 8 நாட்கள் கலந்து கொண்டு மாணவர்களை ஒருங்கி ணைத்தனர். பயிற்சியின் இறுதி நாளில், ஆங்கிலம் எளிய முறையில் கற்பது எப்படி என்ற தலைப்பில் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.ஜெயநாராயணன் கற்பித்தார். பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட மாண வர்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.